கோலாலம்பூர், டிசம்பர் 11 – நாட்டிலுள்ள பெரும்பாலான மாநிலங்களில், இன்று தொடங்கி வரும் புதன்கிழமை வரையில், இடியுடன் கூடிய அடை மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.
அந்த கணிப்பு தொடர்பான, வானிலை ஆய்வு மையத்தின் அட்டவணையை, NADMA – தேசிய பேரிடர் நிர்வாக நிறுவனம் இன்று தனது அதிகாரப்பூர்வ X சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளது.
அந்த அட்டவணைப்படி, இன்று காலை, கிளந்தான், திரங்கானு, பஹாங், ஜொகூர், சபா மற்றும் சரவாக் மாநிலங்களில் ஒரிரு இடங்களில் மழை பெய்யும்.
எனினும், மாலையில், புத்ராஜெயா உட்பட கெடா, பினாங்கு, பகாங், பேராக், நெகிரி செம்பிலான், மலாக்கா, ஜொகூர், சரவாக், சபா ஆகிய மாநிலங்களில், இடியுடன் கூடிய அடை மழை பெய்யுமென கணிக்கப்பட்டுள்ளது.
இரவு வரையில் அந்த வானிலை நீடிக்கும் எனவும் கூறப்படுகிறது.
நாளையும், புதன்கிழமை மாலையும் அதே நிலை தொடரும் வேளை ; பஹாங், சரவாக் ஆகிய மாநிலங்களில் இடியுடன் கூடிய அடை மழை தொடர்ந்து பெய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, புதன்கிழமை, காலை வழக்கம் போல மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ள வேளை; மாலை பெரும்பாலான மாநிலங்களில் அடை மழை பொழியும்.