ஜோகூர் பாரு, மார்ச் 4 – ஜோகூரிலுள்ள, நான்கு மாவட்டங்களில், கடந்த இரு நாட்களாக, மாநில குடிநுழைவுத் துறை அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி சோதனை நடவடிக்கைகளில், பயண அனுமதியை தவறாக பயன்படுத்திய 66 வெளிநாட்டவர்கள் கைதுச் செய்யப்பட்டனர்.
அவர்களை சட்டவிரோதமாக வேலைக்கு அமர்த்தியிருந்த, நான்கு உள்நாட்டு ஆடவர்களும் கைதாகினர்.
கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி, ஜோகூர் பாரு, செகாமாட், பத்து பஹாட் மற்றும் மெர்சிங்கில் அந்த அதிரடி சோதனை மேற்கொள்ளபட்டது.
அந்த சோதனையின் போது, 324 பேரின் ஆவணங்கள் ஆய்வுச் செய்யப்பட்டதாக, ஜோகூர் குடிநுழைவுத் துறை இயக்குனர் பஹாருடின் தயிர் தெரிவித்தார்.
முறையான ஆவணங்களை கொண்டிருக்காத 42 தாய்லாந்து நாட்டவர்கள், மியன்மார் நாட்டவர்கள் எழுவர், வியட்நாமை சேர்ந்த நால்வர், இந்தோனேசியர்கள் மூவர், ஸ்ரீ லங்காவை சேர்ந்த மூவர் ஆகியோர் கைதுச் செய்யப்பட்டவர்களில் அடங்குவர்.
பயண ஆவணங்கள் இல்லாதது, பயண அனுமதியை தவறாக பயன்படுத்தியது, அனுமதிக்கப்பட்டதைக் காட்டிலும் கூடுதல் காலம் நாட்டில் தங்கி இருந்தது ஆகிய குற்றங்களுக்காக அவர்கள் கைதுச் செய்யப்பட்டனர்.