வாஷிங்டன், நவ 11 – இருளை அகற்றி ஒளியை ஏற்றுவதாக தீபாவளி பண்டிகை அமையட்டும் என அமெரிக்க துணையதிபர் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார். வாஷிங்டனில் தமது அரசாங்க இல்லத்தில் முன்கூட்டியே நடத்திய தீபாவளி விருந்து நிகழ்வில் 300க்கும் அதிகமான விருந்தினர்களிடையே உரையாற்றியபோது கமலா ஹாரிஸ் தமது தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.
அந்த விருந்து நிகழ்வில் கலந்துகொண்டவர்களில் பெரும்பாலோர் இந்துக்கள் ஆவர். இஸ்ரேல்- ஹமாஸ் தரப்புக்கிடையே போர் நடைபெறும் சூழலில் , உலகம் எதிர்கொண்டிருக்கம் இருண்ட மற்றும் சிரமமான நிலைக்கு ஒளி ஏற்படுத்தும் வகையில் தீபங்களின் பண்டிகையாக தீபாவளியை கொண்டாடுவது முக்கியம் என அவர் தெரிவித்தார்.