ஷா ஆலாம், மார்ச் 1 – கால்நடைகளை சாலைகளில் சுற்றி திரிய அனுமதிக்கும் அதன் உரிமையாளர்களுக்கு பத்தாயிரம் ரிங்கிட் வரையில் அபராதம் விதிக்க, சிலாங்கூர் மாநில அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
தற்போது விதிக்கப்படும் ஆயிரம் ரிங்கிட் அபராதத்தை கண்டு, கால்நடை உரிமையாளர்கள் அஞ்சுவதாக இல்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ங் சூ லிம் தெரிவித்தார்.
அதோடு, 971-ஆம் ஆண்டு, கால்நடை கட்டுப்பாட்டு சட்டத்தின், பிரிவு ஐந்து, உட்பிரிவு ஒன்றின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் 12 மாதங்கள் வரையில் சிறைத் தண்டனையும் விதிக்கப்படலாம்.
சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகள் குறிப்பாக மாடுகள், தங்களுக்கு சொந்தமானது என்பதை பல சமயங்களில் அதன் உரிமையாளர்கள் ஒப்புக் கொள்வதில்லை என்பதால், அப்பிரச்சனை தீவிரமாகி வருகிறது.
அதனால், அப்பிரச்சனைக்கு தீர்வுக் காண ஏதுவாக, ஊராட்சி மன்றங்களுடன் ஒத்துழைப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சூ லீ சொன்னார்.
சிலாங்கூர் சட்டமன்ற கூட்டத்தின் போது, சாலைகளில் சுற்றுத் திரியும் கால்நடைகள் குறித்து முன் வைக்கப்பட்ட கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.