Latestமலேசியா

ஈப்போவில், வீட்டின் கூரை மீது அமர்ந்திருந்த மனநலம் பாதிக்கப்பட்ட ஆடவர் ; தீயணைப்பு மீட்புப் படை வீரர்கள் 15 நிமிடத்தில் சமாதானப்படுத்தி மீட்டனர்

ஈப்போ, மார்ச் 29 – பேராக், ஈப்போ, மேரு ராயா, தாமான் மேருவிலுள்ள, தமது வீட்டின் கூரையில் மேல் அமர்ந்திருந்த, மனநலம் பாதிக்கப்பட்ட ஆடவர் ஒருவரை, தீயணைப்பு மீட்புப் படை வீரர்கள், 15 நிமிட போராட்டத்திற்கு பின்னர், சமாதானம் செய்து மீட்டனர்.

அச்சம்பவம் பின்னிரவு மணி 1.40 வாக்கில் நிகழ்ந்தது.

விசித்திரமான சத்தம் கேட்டதை தொடர்ந்து, அந்த 40 வயது மதிக்கத்தக்க நபர், உள்ளாடையோடு வீட்டின் கூரையில் மேல் அமர்ந்திருப்பதை கண்ட அண்டை வீட்டுக்காரர் அது குறித்து, தகவல் கொடுத்துள்ளார்.

உடனடியாக சம்பவ இடத்தை சென்றடைந்த தீயணைப்பு மீட்புப் படை வீரர்கள், சம்பந்தப்பட்ட ஆடவர், அந்த ஒரு மாடி வீட்டின் கூரை மேல் லாவகமாக படுத்திருப்பதை கண்டதாக கூறப்படுகிறது.

எனினும், 15 நிமிடங்களில் மீட்கப்பட்ட அந்த ஆடவர் ஆக்ரோஷமாக நடந்து கொள்ளவில்லை என்பதோடு, அவருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை.

மேல் நடவடிக்கைகாக பின்னர் அவர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!