
சுங்கை பெசார் ஏப்ரல் 21 – சுங்கை பெசார், சுங்கை ஹாஜி டோரானி பஜார் அருகே உள்ள ஆற்றில் நேற்று ஒரு முதியவரின் அழுகிய உடல் கண்டெடுக்கப்பட்டது.
இது தொடர்பாக காலை மணி 7.30க்கு தகவல் கிடைத்ததாக சபாக் பெர்னாம் மாவட்ட காவல்துறைத் தலைவர், சுப்பரிடெண்டன் முகமட் யூசோப் அகமட் தெரிவித்தார்.
கண்டெடுக்கப்பட்ட முதியவர் 70 வயது மதிக்கத்தக்க உள்நாட்டு ஆடவர் என்றும், அவர் மனநலக் கோளாறினால் பாதிக்கப்பட்டவர் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனையின் முடிவுகளில், எந்தக் குற்றவியல் கூறுகளும் கண்டறியப்படவில்லை