பாலிங், பிப்ரவரி 13 – கெடா, குவாலா கெட்டில், கம்போங் படாங் லாலாங் பெசாவில், புதிதாக கட்டப்பட்ட வீட்டின் சுவர் திடீரென இடிந்து விழுந்ததில், எட்டு வயது சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
நேற்று நண்பகல் மணி 12 வாக்கில் அச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததை, பாலிங் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிடெண்டன் சம்சுடின் மாமாட் உறுதிப்படுத்தினார்.
வீட்டின், சமையல் அறை புதுப்பிப்பு பணிகளுக்காக அந்த சுவர் எழுப்பப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
எனினும், உயிரிழந்த சிறுவன், நேற்று காலை மணி 10.30 வாக்கில், தனது சகோதரனுடன் அந்த சுவருக்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த போது அது திடீரென இடிந்து விழுந்தது.
தாவார் சிகிச்சை மையத்திற்கு கொண்டு செல்லப்படும் வழியில் அச்சிறுவன் உயிரிழந்த வேளை ; அவனது சகோதரன் சிராய்ப்பு காயங்களுக்கு மட்டுமே இலக்கானதாக கூறப்படுகிறது.
அச்சம்பவம் தொடர்பில், பாதிக்கப்பட்ட சிறுவர்களின் தாயாரின் வாக்குமூலத்தை போலீஸ் பதிவுச் செய்துள்ளது.