Latestமலேசியா

கெளாங் பாத்தா இரவு சந்தையில் நன்கொடை வசூலித்த 5 வெளிநாட்டினர் கைது

ஜோகூர் பாரு, ஜன 31 – ஜோகூரில் கெளாங் பாத்தா இரவுச் சந்தையில் சட்டவிரோதமாக நன்கொடை வசூலித்த ஐந்து வெளிநாட்டினரை குடிநுழைவுத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இவர்களில் மாற்றுத் திறனாளிகளும் அடங்குவர். சிலர் தஹ்ஃபிஸ் சமயப் பள்ளிகள் மற்றும் சமய இயக்கங்களுக்காக நன்கொடை திரட்டுவதாக கூறிக்கொண்டு உண்டியலை ஏந்திக்கொண்டு இரவு சந்தையில் சுற்றி வந்தனர் என ஜோகூர் குடிநுழைவு இயக்குனர் பஹாருதீன் தாஹிர் தெரிவித்தார். வெளிநாட்டினர் நன்கொடை திரட்டுகின்றனர் என பொதுமக்களிடமிருந்து புகார் கிடைக்கப் பெற்றதைத் தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டதாக இன்று வெளியிட்ட அறிக்கையில் பஹாருதீன் தெரிவித்தார். கைது செய்யப்பட்டவர்களில் மூன்று ஆடவர்கள் கம்போடியாவையும் இதர இரண்டு ஆடவர்கள் தாய்லாந்தையும் சேரந்தவர்கள். மேலும் அந்த இரவுச் சந்தையில் உள்ள அங்காடிக் கடையில் வேலை செய்த இந்தோனேசிய ஆடவரும் ஒரு பெண்ணும் அடங்குவர் என அவர் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!