காஸா, நவ6 – இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தரப்பிற்கிடையே கடந்த அக்டோபர் மாதம் போர் தொடங்கியது முதல் காஸா தீபகற்பத்தில் மூன்றாவது முறையாக இணையம் மற்றும் தொலைபேசிக்கான தொடர்பு சேவைகளை இஸ்ரேல் நிறுத்தியிருப்பதாக பால்டேர் தொலைதொடர்பு நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
இஸ்ரேலின் இந்த நடவடிக்கை குறித்து தாங்கள் அதிர்ச்சி அடைவதாக பால்டேர் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இணையம் மற்றும் தொலைபேசி தொடர்பு சேவை நிறுத்தப்பட்ட அடுத்த சில நிமிடங்களில் காஸா நகர் மற்றும் அருகேயுள்ள பாலஸ்தீன பிரதேசங்களில் இஸ்ரேல் விமானங்கள் மூர்க்கத்தனமான வான் தாக்குதல்களை நடத்தியதாக தகவல்கள் வெளியாகின.