
தெமர்லோ, ஜூன் 18 – இம்மாதம் 11 ஆம்தேதி மோட்டார் சைக்கிளில் மோதியதால் இரு இளம் பெண்கள் கொல்லப்படுவதாக காரணமாக இருந்த புரோடுவா Bezza கார் ஓட்டுநர் ஒருவர் மீது தெமர்லோ
மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இரண்டு குற்றச்சாட்டுக்கள் உட்பட நான்கு குற்றச்சாட்டுக்கள் கொண்டுவரப்பட்டன. இரு இளம் பெண்களுக்கு மரணம் விளைவித்தோடு போதைப் பொருள் விநியோகித்தது மற்றும் போதைப் பொருள் வைத்திருந்ததாக 38 வயதுடைய Chun Kok Koong என்பவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. மிகவும் அபாயகரமா வாகனம் செலுத்தியதால் நுர் எர்டினா ( Nur Erdina ) மற்றும் அனிஸ் இர்டியானா ( Aneez Irdienna ) ஆகிய இரு பெண்களுக்கு மரணம் விளைவித்தாக Chun kok keong மீது இரண்டு குற்றச்சாட்டுக்கள் கொண்டு வரப்பட்டன.
ஜூன் 11 ஆம்தேதி Jalan Tengku Ismail சமிக்ஞை விளக்கு பகுதியில் அவர் இந்த குற்றங்களை புரிந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டார். இந்த இரண்டு குற்றச்சாட்டுகளும் ஜூலை 17ஆம் தேதி மறு வாசிப்புக்கு செவிமடுக்கப்படும் . அதோடு விசாரணை முடியும்வரை அவரது வாகன லைசெனஸ் முடக்கப்பட்டது. மேலும் 1952 ஆம் ஆண்டின் அபாயகரமான போதைப் பொருள் சட்டத்தின் கீழ் 50 .85 கிரேம் Methamphetamine போதைப் பொருளை வைத்திருந்தது மற்றும் 0 . 85 கிரேம் ஹெரொய்ன் வைத்திருந்தாக மேலும் இரண்டு குற்றச்சாட்டுக்களும் Chun Kok Keong மீது குற்றஞ்சாட்டப்பட்டது. அவர் தனக்கு எதிரான நான்கு குற்றச்சாட்டுக்களையும் மறுத்து விசாரணை கோரினார்.