பணியில் இருக்கும் ரேலா உறுப்பினரை மிரட்டுவது, தடுப்பது மற்றும் கத்தினால் விசாரணை

கோலாலம்பூர், நவ 6 – பணியில் இருக்கும் ரேலா உறுப்பினரை பொதுமக்கள் முன்னிலையில் மிரட்டுவது, தடுப்பது மற்றும் கூச்சலிடுபவர் மீது நடைமுறையில் உள்ள சட்டத்தின் விதிமுறைகளின் படி விசாரணை நடத்தப்படும் .
முன்னதாக, 58 வினாடிகள் கொண்ட வைரலான வீடியோவில் பொது இடத்தில் ஒரு நபர் RELA உறுப்பினரை திட்டியதாக நம்பப்படுகிறது. இது இணைய பயனர்களிடமிருந்து பல்வேறு எதிர்வினைகளுக்கு வழிவகுத்தது. அந்த நபர் திட்டியபோது வயதான RELA உறுப்பினர் பதில் எதுவும் கூறுவில்லை.
ஜோகூர் பாரு சுல்தான் இஸ்கந்தர் கட்டிடத்தில் உள்ள ஜோகூர் பாரு சென்ட்ரல் பேருந்து முனையப் பகுதியில் பொது ஒழுங்கு மற்றும் பாதுகாப்பிற்கு உதவுவதற்காக அந்த ரேலா உறுப்பினர் பணியில் இருந்ததாக RELA வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
பேருந்து சேவையைப் பயன்படுத்தும்போது நியமிக்கப்பட்ட வழித்தடத்தைப் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்பட்ட பின்னர், அதிருப்தி அடைந்த பொதுமக்களில் ஒருவர் சம்பந்தப்பட்ட ரேலா உறுப்பினரை கடுமையாக கண்டிக்கும் இந்த சம்பவத்தை ரேலா தீவிரமாகக் கருதுகிறது.
மேலும் ரேலாவின் உறுப்பினர்களும் துறையின் அதிகார வரம்பிற்கு உட்பட்டு அதிகாரப்பூர்வ கடமைகளைச் செய்யும் அரசு ஊழியர்கள் என்பதை ரேலா வலியுறுத்தியது.



