
கூலிம் , ஏப் 28 – கோழி இறைச்சி நடவடிக்கைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சுத்திகரிப்பு அமைப்புகளை நிறுவத் தவறியதற்காக, அதன் செயல்பாடுகளை உடனடியாக நிறுத்தும்படி கூலியிலுள் உள்ள மற்றொரு கோழி பதப்படுத்தும் தொழிற்சாலைக்கு உத்தரவிடப்பட்டது.
தாமான் இண்டஸ்ட்ரி வாஜாவில் அமைந்துள்ள இந்த ஆலையில் நேற்று நடத்தப்பட்ட ஆய்வில், அது சுத்திகரிக்கப்படாத கழிவுகளை சுற்றுச்சூழலுக்கு மாசுபடுத்தும் வகையில் வெளியேற்றுவது கண்டறியப்பட்டதாக கெடா சுற்றுச்சூழல் துறையின் இயக்குநர் ஷரியா ஷாக்கியா சைட் சஹாப் ( Sharifah Zakian Syed Sahab ) தெரிவித்தார்.
சுற்றுச்சூழல் தரச் சட்டம் 1974 இன் பிரிவு 38(1)(a) யின் , இந்த தொழிற்சாலைக்கு உபகரணங்கள் செயல்பாட்டு தடுப்பு அறிவிப்பு வழங்கப்பட்டதாக அவர் கூறினார்.
கோழிகளை பதப்படுத்துவதற்காக தொழில்துறை கழிவுநீர் சுத்திகரிப்பு அமைப்பை நிறுவுவதில் அந்த தொழிற்சாலையை நடத்திவருவோர் தவறியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. மாசுபாட்டை உடனடியாக நிறுத்துவதற்காக இந்த நடடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
எடுக்கப்பட்ட சரியான நடவடிக்கைகளில் துறை திருப்தி அடைந்த பின்னரே அந்த தொழிற்சாலையின் செயல்பாடுகள் மீண்டும் தொடங்குவதற்கு அனுமதிக்கப்படும் என்று Sharifah கூறினார்