Latestமலேசியா

அதிக எண்ணிக்கையிலான கொலை வழக்குகள் பட்டியலில் சிலாங்கூர் முதலிடம்

கோலாலம்பூர், ஜூன் 16 – கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2024ஆம் ஆண்டு இறுதி வரை நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்ட மொத்தம் 476 கொலை வழக்குகளில், 115 கொலை வழக்குகளைக் கொண்டிருக்கும் சிலாங்கூர் மாநிலம் முதல் நிலையிலுள்ளதென்று மலேசிய காவல்துறையினர் தெரிவித்துள்னனர்.

2023 ஆம் ஆண்டில் 261 கொலை வழக்குகளும், 2024ஆம் ஆண்டில் 215 கொலை வழக்குகளும் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்ந்து பேராக் மாநிலத்தில் 60 வழக்குகளும், ஜோகூர் மாநிலத்தில் 59 வழக்குகளும், சபாவில் 47 வழக்குகளும் மற்றும் சரவாக்கில் 36 வழக்குகளும் பதிவாகியுள்ளன.

மாநிலத்தில் கொலை வழக்குகள் அதிகரிப்பிற்கு, வெளிநாட்டு தொழிலாளர்களின் வருகை, கூடுதலான பரப்பளவு மற்றும் மக்கள் தொகை அதிகரிப்பு போன்றவைகள் முக்கிய காரணிகள் என்று காவல் துறையினர் விளக்கமளிதுள்ளனர்

மொத்த வழக்குகளில், இன்னும் 30 சதவீத கொலை வழக்குகள் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் உள்ளதென்று அறியப்படுகின்றது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!