Latestமலேசியா

இந்தியாவில் 3,961-ராக பதிவாகிய கோவிட்-19 சம்பவங்கள்; கேரளா & டெல்லியில் அதிக பாதிப்பு

புது டெல்லி, ஜூன்-2 – இந்தியாவில் கோவிட்-19 நோய் மீண்டும் தீவிரமடைந்து, நோய் பாதிப்பு எண்ணிக்கை 3,961-ராக பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணி நேரங்களில் மட்டும் 203 புதியச் சம்பவங்கள் பதிவாகின.

இந்த 2 நாட்களில் நால்வர் பலியாயினர்; தலைநரான புது டெல்லி, தமிழகம், கேரளா, மகாராஷ்ட்ரா மாநிலங்களில் தலா 1 மரணம் பதிவாகியது.

இதையடுத்து இவ்வாண்டு ஜனவரி முதல் இதுவரை பலியானோரின் எண்ணிக்கை 32 பேராக அதிகரித்துள்ளது.

டெல்லியில், காசநோய்க்குப் பிந்தைய நுரையீரல் பாதிப்பு மற்றும் சுவாசக்குழாய் தொற்றால் பாதிக்கப்பட்ட 22 வயது பெண் கோவிட் கிருமியால் உயிரிழந்தார்.

தமிழ்நாட்டில், ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்ட 25 வயது இளைஞர் பலியானார்.

கடந்த 24 மணி நேரங்களில் டெல்லியில் மடும் 47 புதியப் பாதிப்புகள் பதிவாகின; கேரளாவில் புதிதாக 35 சம்பவங்கள் பதிவாகி, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,435-தாக உயர்ந்துள்ளது.

மும்பையைத் தலைநகராகக் கொண்ட மகாராஷ்ட்ரா மாநிலத்தில் 21 சம்பவங்களும், மேற்குவங்கத்தில் 44 சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

கர்நாடகாவில் புதிதாக 15 சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில், பள்ளிக் குழந்தைகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உரிய தடுப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!