பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 1 – நாட்டிலுள்ள 84 லட்சம் பேர், வரும் புதன்கிழமை தொடங்கி, நூறு முதல் 650 ரிங்கிட்டை உட்படுத்திய இரண்டாம் கட்ட ரஹ்மா உதவித் தொகையை பெறுவார்கள்.
அந்த இரண்டாம் கட்ட உதவித் தொகைக்காக இம்முறை 150 கோடி ரிங்கிட் நிதியை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது.
அந்த தொகை கடந்தாண்டு ஒதுக்கப்பட்ட 126 கோடி ரிங்கிட்டுடன் ஒப்பிடுகையில் 20 விழுக்காடு அதிகமாகும்.
மடானி அரசாங்கத்தின் பொருளாதார சீர்த்திருத்தம் என்பது நாட்டின் நிதி கட்டமைப்பை சீர்செய்வது மட்டுமல்ல. மாறாக, நாட்டின் செல்வ செழிப்பை மக்களுடன் சரிசமமாக பகிர்ந்து கொள்வதும் ஆகும்.
அதனால், இரண்டாம் கட்ட STR ரஹ்மா உதவித் தொகையை பெற தகுதியானவர்கள் வங்கிக் கணக்கில், அந்த தொகை கட்டங் கட்டமாக நேரடியாக செலுத்தப்படுமென பிரதமர் சொன்னார்.