
சுங்கை பட்டாணி, ஏப் 28 – சுங்கை பட்டாணி, Jalan Lencongan Barat, சாலையில், போக்குவரத்து ஓட்டத்திற்கு எதிராகவும் மதுபோதையிலும் வாகனம் ஓட்டிய சீனப் பிரஜை ஒருவர் மற்றொரு காருடன் மோதியதைத் தொடர்ந்து விசாரணைக்கு உதவுவதற்காக நான்கு நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
50 வயதுக்குட்பட்ட அந்தச் சந்தேக நபர், 1987 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 42 மற்றும் பிரிவு 45 (C) 6 ஆகியவற்றின் கீழ் விசாரணைக்கு உதவுவதற்காக இன்று முதல் மே 1 வரை காவலில் வைக்கப்பட்டுள்ளார் என கோலா மூடா மாவட்ட போலீஸ் தலைவர்
உதவி கமிஷனர் ஹன்யான் ராம்லான் தெரிவித்தார் .
போக்குவரத்து நெரிசலுக்கு எதிராக வாகனம் ஓட்டிச் சென்ற ஒரு சீன நபர் நேற்று மதுபோதையில் இருந்ததால், மற்றொரு காருடன் விபத்துக்குள்ளானதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
ஒரு நிறுவனத்தின் இயக்குநராகவும் இருக்கும் அந்த சீன நபருக்கு முகத்தில் சிறு காயங்கள் ஏற்பட்டன, அதேசமயம் மற்றொரு காரின் ஓட்டுநருக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை.



