Latestமலேசியா

குவாந்தான் நெடுஞ்சாலை விபத்தில் 2 சீன பிரஜைகள் பலி; 6 பேர் காயம்

குவாந்தான், மே-24 – பஹாங், குவாந்தான் அருகே கிழக்குக் கரை நெடுஞ்சாலையில் நிகழ்ந்த கோர சாலை விபத்தில், 2 சீன நாட்டவர்கள் பலியாயினர்.

மேலும் அறுவர் காயமுற்றனர்.

திரங்கானு செல்லும் வழியில் Mercedes-Benz மற்றும் Nissan X-Trail வாகனங்கள் மோதிக் கொண்டதில் நேற்று பிற்பகல் 2 மணிக்கு அச்சம்பவம் நிகழ்ந்ததாக, மாவட்ட போலீஸ் தலைவர் வான் மொஹமட் சஹாரி வான் பூசு தெரிவித்தார்.

கோலாலம்பூரிலிருந்து வந்துகொண்டிருந்த Nissan கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பை மோதி அவசரப் பாதையில் போய் நின்றது.

அப்போது அவ்வழியே வந்த Mercedes கார் அதனுடன் மோதியது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

காயமடைந்தவர்கள் குறித்த விவரங்கள் இன்னும் தெரிய வரவில்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!