
சிலாங்கூர், ஆகஸ்ட் 24 – சிலாங்கூர், தஞ்சோங் காராங், Batu 7 பகுதியில் நள்ளிரவு நேரத்தில் வளைவில் சென்ற டேங்கர் லாரி சறுக்கி சாலையோரம் கவிழ்ந்ததில், சம்பந்தப்பட்ட லாரி ஓட்டுநர் லாரிக்குள் சிக்கிக் கொண்டார்.
தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, தஞ்சோங் காராங் தீயணைப்பு நிலையத்திலிருந்து 7 வீரர்கள் மற்றும் ஒரு தீயணைப்பு வாகனம் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டது.
பயன்படுத்தப்பட்ட கருப்பு எண்ணெயை ஏற்றிச் சென்ற லாரியில் சிக்கிய ஓட்டுநரை தீயணைப்பு வீரர்கள் மீட்டு, பாதுகாப்பாக வெளியே கொண்டு வந்தனர்.



