
தங்காக், ஜூன் 4 – இன்று காலை, தங்காக் புக்கிட் கம்பீர் வீடொன்றில், மனைவியை ஆயுதத்தால் சரமாரியாக வெட்டி கொலை செய்த கணவனைக் காவல் துறையினர் வெற்றிகரமாக கைது செய்துள்ளனர்.
30 வயது மதிக்கத்தக்க அந்த ஆடவன், மனைவியின் கழுத்தை அறுத்தவுடன், கம்போங் டுரியான் சோண்டோங்கில் உள்ள தனது மாமியார் வீட்டிற்குச் சென்று, குறைந்தது 4 வாகனங்களுக்கு தீ வைத்துள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.
அக்குற்றம், கொலை வழக்கில் பதிவுச் செய்யப்பட்ட நிலையில், அந்த கொலையாளி நாளை நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்படுவார் என்று தங்காக் மாவட்ட காவல்துறைத் தலைவர், ரோஸ்லான் முகமது தாலிப் கூறியுள்ளார்.
சரியான சான்றுகளோடு அக்குற்றம் நிரூபிக்கப்பட்டால், அக்குற்றவாளிக்கு தக்க தண்டனை கிடைக்குமென்று எதிர்பார்க்கப்படுகின்றது.