Latestமலேசியா

நிதி நெருக்கடி; அனைத்து நடவடிக்கைளையும் பேரா காற்பந்து சங்கம் இடை நிறுத்தியது

ஈப்போ, மே 27 – பேரா குழு எதிர்நோக்கியுள்ள நிதி நெருக்கடியை தொடர்ந்து அனைத்து செயல் நடவடிக்கைகளையும் பேரா காற்பந்து சங்கம் இடைநிறுத்தியுள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட விளையாட்டாளர்களை திருப்பி அனுப்பிவிட்டதாகவும் , மீதமுள்ள நிதியில் Bos Gaurus தலைமையிலான பேரா குழுவின் பணியாளர்கள் மற்றும் விளையாட்டாளர்களுக்கு க்கு தன்னால் முடிந்த பணத்தை செலுத்தியதாக நேற்றிரவு பேரா காற்பந்து சங்கத்தின் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

இந்த பருவத்தில் பேரா காற்பந்து குழு எந்தவொரு லீக் அல்லது காற்பந்துபோட்டியிலும் பங்கேற்காது என்று அனைத்து பணியாளர்களுக்கும் விளையாட்டாளர்களுக்கும் மாநில காற்பந்து சங்கம் கூறியுள்ளது. விளையாட்டாளர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் இப்போது மற்ற காற்பந்து கிளப்புகளில் வாய்ப்புகளைத் தேட சுதந்திரமாக உள்ளனர் என்று பேரா காற்பந்த சங்கம் தனது முகநூலில் பதிவிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. முந்தைய நிர்வாகம் விட்டுச்சென்ற 8 மில்லியன் ரிங்கிட் கடனை அடைத்து, கிளப்பின் செயல்பாடுகளை நிர்வகிக்க ஆண்டுதோறும் 10 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கியதன் மூலம் பேரா FC தனது பயணத்தைத் தொடங்கியுள்ளதாக அதன் நிர்வாகம் அறிவித்துள்ளது. முதலீடு செய்யப்பட்ட ஒவ்வொரு நடவடிக்கை செலவினமும் , கடந்த பருவத்தில் நான்கு அணிகள், பயிற்சியாளர்கள் மற்றும் நிர்வாக ஊழியர்களின் செலவுகள் மற்றும் சம்பளத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டதாக பேரா காற்பந்து சங்கம் தெரிவித்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!