Latestமலேசியா

மனைவி, மகளை பாராங் கத்தியால் தாக்கிய ஆடவருக்கு 20 ஆண்டுகள் சிறை

 

சிபு, நவம்பர்-5,

சரவாக், கனோவிட்டில் கடந்த மாதம் மனைவியையும் மகளையும் பாராங் கத்தியால் தாக்கிய வேலையில்லா ஆடவருக்கு, 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

57 வயது Rahim Shim Abdullah குற்றத்தை ஒப்புக் கொண்டதை அடுத்து, சிபு செஷன்ஸ் நீதிமன்றம் அத்தீர்ப்பை வழங்கியது.

46 வயது மனைவி, 20 வயது மகள் என இருவரையும் தாக்கியதற்காக தலா 10 ஆண்டுகள் என்ற கணக்கில் சிறைத்தண்டனை அறிவிக்கப்பட்டது.

தண்டனையை ஏக காலத்தில் அல்லாமல், அடுத்தடுத்து அனுபவிக்குமாறு உத்தரவிடப்பட்டது.

மனைவி கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக சந்தேகப்பட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது, அந்நபர் பாராங் கத்தி தாக்குகலில் இறங்கினார்; தடுக்க வந்த மகளையும் வெட்டினார்.

அதில் இருவருமே படுகாயம் அடைந்தனர்.

சம்பவத்தின் போது தாம் ஏதோ ஒரு மனநிலையில் இருந்ததாகவும், தாக்குதலில் இறங்குமாறு ‘உள்ளுக்குள் ஒரு குரல் கேட்டதாகவும்’ அவர் நீதிமன்றத்தில் கூறிக் கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!