Latestமலேசியா

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் டான்ஸ்ரீ வெ.மாணிக்கவாசகம் புத்தகப் பரிசு திட்டம் 2025

கோலாலம்பூர், ஜூன் 9 – மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கமும் டான்ஸ்ரீ வெ.மாணிக்கவாசகம் கல்வி உபகார நிதி நிறுவனமும் ஆண்டுதோறும் சிறந்த நூல்களுக்குப் பரிசளித்து வருகின்றன. ஒவ்வொரு ஆண்டுக்கும் ஓர் இலக்கிய வகை நூல் தேர்வு செய்யப்படுகின்றது. தேர்வு செய்யப்படும் ஒரு நூலுக்கு டான்ஸ்ரீ வே. மாணிக்கவாசகம் அவர்களின் நினைவாக ஏழாயிரம் ரிங்கிட் ரொக்க பரிசும் சான்றிதழும் வழங்கப்படும்.

மேலும் 4 நூல்களுக்குச் சிறப்புப் பரிசாகத் தலா 500 ரிங்கிட்டும் சான்றிதழும் வழங்கப்படும். அந்த வகையில் இவ்வாண்டு நாவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. 2020, 2021, 2022, 2023, 2024 ஆகிய ஐந்து ஆண்டுகளில் பதிப்பிக்கப்பட்ட நாவல்கள் மட்டுமே இவ்வாண்டுக்கான பரிசுத் திட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்படும் என மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தன் தலைவர் மோகனன் பெருமாள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

நூல் பதிப்பிக்கப்பட்ட ஆண்டு நூலில் தெளிவாக இடம்பெற்றிருக்க வேண்டும். அச்சு வடிவில் நூலாக வெளிவந்தவை மட்டுமே போட்டியில் சேர்த்துக் கொள்ளப்படும்.

குறிப்பிடப்பட்ட காலப்பகுதிக்குள் ஒன்றுக்கு மேற்பட்ட நாவல்களை எழுதி நூல் வடிவில் வெளியிட்டோர் தாம் எழுதிய நாவல்கள் அத்தனையையும் அனுப்பி வைக்கலாம். ஆனால், ஒரு நாவலுக்கு மட்டுமே பரிசு வழங்கப்படும். எழுத்தாளர்கள் தங்களுடைய ஒவ்வொரு நூலிலும் கண்டிப்பாக தலா 5 படிகளை அனுப்பி வைக்க வேண்டும். அவற்றை ஒரே தடவையில் மொத்தமாக அனுப்பி வைத்தல் வேண்டும்.

நூலாசிரியர்கள் எந்தக் காரணத்திற்காகவும் நடுவர்களை நேரடியாகவோ, தொலைபேசி வாயிலாகவோ வேறு ஏதாவது வகையிலோ தொடர்பு கொள்ளக்கூடாது. எழுத்தாளர்கள் தங்களைப் பற்றிய தன் விவரக் குறிப்பு ஒன்றையும் தயார் செய்து நூல்களோடு இணைத்து அனுப்புதல் வேண்டும். அதில் தொடர்பு முகவரி, கைபேசி, வீட்டு தொலைபேசி , மின்னஞ்சல், வீட்டு முகவரி ஆகியவற்றை வழங்க வேண்டும். தங்களின் எழுத்து அனுபவத்தையும் சுருக்கமாகக் குறிப்பிட வேண்டும்.

இவ்வாண்டு ஜூலை 10 ஆம் தேதிக்குள் எழுத்தாளர் சங்கத்தின் பின்வரும் முகவரிக்கு புத்தகங்களை அனுப்பி வைக்க வேண்டும். நூல்களை வெளியிடும் எழுத்தாளர்களை ஊக்கப்படும் நோக்கத்துடன் நடத்தப்படும் இப்போட்டியில் பங்கு பெற்று பயனடையுமாறு மோகனன் பெருமாள் கேட்டுக் கொண்டார்.

புத்தகங்களை
அனுப்பிவைக்க
வேண்டிய
முகவரி

D/A Persatuan Penulis Penulis Tamil Malaysia.
D-2-12 Putra Majestic Business Center.
Jalan Kasipillay off Jalan Sultan Azlan Shah,
52100 – Kuala Lumpur.
Kuala Lumpur

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!