Latestமலேசியா

வங்சா மாஜூ அடுக்ககத்தில் கார் தீப்பிடித்தது 11 பேர் சுவாசிப்பதில் சிரமத்தை எதிர்நோக்கினர்

கோலாலம்பூர், ஜூன் 19 – கோலாலம்பூர் வங்சா மாஜூவிலுள்ள அடுக்ககத்தில் ஒரு கார் தீப்பிடித்ததால் சுவாசிப்பதில் சிரமத்தை எதிர்நோக்கிய 11 வெளிநாட்டினர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டனர்.

இன்று காலை மணி 9.56 க்கு அவசர அழைப்பு பெற்றதைத் தொடர்ந்து சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு வங்சா மாஜூ தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்களை கோலாலம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை அனுப்பிவைத்தது.

அந்த அடுக்ககத்தின் கீழ்த் தளத்தில் கார் நிறுத்துமிடத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார் 30 விழுக்காடு தீயில் சேதம் அடைந்தபேதிலும் நிலைமையை தீயணைப்பு வீரர்கள் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தனர். சுவாசிப்பதற்கு சிரமத்தை எதிர்நோக்கிய 11 வெளிநாட்டினரும் கோலாலம்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். காரில் ஏற்பட்ட அந்த தீ குறித்து விசாரணை நடத்தும்படி தீயணைப்பு விசாரணைத்துறை கேட்டுக்கொள்ளப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!