Latestமலேசியா

அடுத்த ஆண்டு ஜனவரியில் 9,000 புதிய ஆசிரியர்கள் பணியில் ஈடுபடுவார்கள்

கோலாலம்பூர், நவ 23 – அடுத்த ஆண்டு ஜனவரியில் நாடு முழுவதிலும் புதிய பள்ளி தவணைக் காலம் தொடங்கும்போது பள்ளிகளில் 9,000 புதிய ஆசிரியர்கள் தங்களது சேவையை தொடங்கவிருக்கின்றனர் என கல்வித்துறை துணையமைச்சர் லிம் ஹுய் யிங் தெரிவித்தார். பள்ளிகளின் தேவைக்கு ஏற்ப ஆசிரியர்கள் அதிகரிக்கப்படுவதை கல்வி அமைச்சு உறுதிப்படுத்தும். ஆசிரியர்களின் பற்றாக்குறை காரணத்தினால் மற்ற ஆசிரியர்கள் கூடுதல் பணிச்சுமைக்கு உள்ளாகுவதை கல்வி அமைச்சு அடையாளம் கண்டுள்ளதாக அவர் கூறினார்.

கல்வி சேவைகள் ஆணையத்திடமிருந்து புதிய ஆசிரியர்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களை நாங்கள் பெற்றுள்ளோம் என லிம் ஹுய் யிங் தெரிவித்தார். புதிதாக பணியில் சேர்க்கப்பட்ட ஆசிரியர்கள் அனைவரும் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பள்ளியில் தங்களது கடமையில் ஈடுபடுவார்கள் என அவர் கூறினார். மலாய்ப் பாடம், ஆங்கிலம், இஸ்லாமிய கல்வி, வடிவமைப்பு மற்றும் தொழிட்நுட்பம் ஆகிய பாடங்களை போதித்து கொடுப்பதற்கான ஆசிரியர்கள் பற்றாக்குறை இருந்து வருவதாக துணையமைச்சர் தெவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!