![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2023/11/MixCollage-23-Nov-2023-07-24-PM-6799.jpg)
கோலாலம்பூர், நவ 23 – அடுத்த ஆண்டு தேசிய சேவை பயிற்சித் திட்டம் அமல்படுத்தப்படாது என தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் ஹசான் தெரிவித்தார். அடுத்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் ஒதுக்கீடு இல்லாத காரணத்தினால் தேசிய சேவைத் திட்டம் அமல்படுத்தப்படாது என அவர் கூறினார். இந்த பயிற்சிக்கு நாம் ராணுவ முகாமை பயன்படுத்துவதாக இருந்தால் ஒரே நேரத்தில் அனைத்து முகாம்களையும் நாம் மேம்படுத்த வேண்டியிருப்பதாக அவர் கூறினார்.
தேசிய பயிற்சி சேவைத் திட்டத்தை அமல்படுத்துவதற்கு இறுதிவடிவம் காணப்படுவதற்கு முன் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பிரிடமும் இதுகுறித்து விரிவாக விவாதிக்கப்படும் என அவர் தெரிவித்தார். தேசிய பயிற்சி சேவைத் திட்டம் 2025ஆம் ஆண்டுத்தான் தொடங்கப்படும் என நாடாளுமன்றத்தில் தமது அமைச்சு நிலையிலான 2024ஆம் ஆண்டு பட்ஜெட் உரை விவாதத்தை நிறைவு செய்தபோது முகமட் ஹசான் இத்தகவலை வெளியிட்டார்.