Latestமலேசியா

அதிக நேரம் காத்திருந்தால் விரக்தி; போர்ட் டிக்சனில் காரால் முடி திருத்தும் நிலையத்தை மோதித் தள்ளிய ஆடவன்

போர்ட் டிக்சன், நவ 22 – முடியை வெட்ட அதிக நேரம் காத்திருக்க வேண்டியிருந்த காரணத்தால், ஆத்திரமடைந்த ஆடவன் ஒருவன் முடி திருத்தும் நிலையத்தை காரால் மோதித் தள்ளிய சம்பவம் கடந்த வாரம் வியாழக்கிழமை போர்ட் டிக்சனில் நிகழ்ந்துள்ளது. அதனைத் தொடர்ந்து அவ்வாடவன் நேற்று போலிசாரால் கைது செய்யப்பட்டான்.

44 வயதான அந்த ஆடவன், கடையின் முன்புறம் நிறுத்தி வைத்திருந்த புரொட்டோன் வாஜா காரைக் கொண்டு கடையின் கதவை பலமுறை மோதித் தள்ளியுள்ளான்.

சோதித்ததில், அவன் போதைப்பொருள் உட்கொண்டிருந்தது தெரிய வந்துள்ளதோடு, பல குற்றப்பதிவுகளும் அவனது பெயரில் பதிவாகி இருப்பதும் கண்டறியப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!