![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2023/11/MixCollage-22-Nov-2023-07-45-PM-3708.jpg)
கோலாலம்பூர், நவ 22 – பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் பதவியேற்ற இந்த ஒரு ஆண்டில் அவருக்கான ஆதரவு சரிந்திருப்பதாக மெர்டேக்கா செண்டர் தனது ஆய்வின் முடிவு காட்டுவதாக அது தெரிவித்துள்ளது.
2022 டிசம்பரில், 68 விழுக்காடாக இருந்த அன்வாருக்கான ஆதரவு தற்போது 50 விழுக்காட்டிற்கு சரிந்துள்ளது. ஒற்றுமை அரசாங்கத்திற்கான ஆதரவு 54 விழுக்காட்டிலிருந்து 41 விழுக்காட்டிற்கு குறைந்துள்ளது.
60 விழுக்காடு வாக்காளர்கள் நாடு தவறான பாதையில் சென்று கொண்டிருப்பதாக 78 விழுக்காட்டினர் நாட்டின் பொருளாதாரம்தான் மக்கள் எதிர்நோக்கும் மிகப்பெரிய பிரச்சனை என்றும் ஆய்வு முடிவு காட்டுவதாக மெர்டேக்கா செண்டர் தெரிவித்திருக்கிறது.
இந்த ஆயிவில் 1220 வாக்காளர்கள் பங்கு கொண்டிருப்பதாகவும் அது தெரிவித்திருக்கிறது.
அது 52 விழுக்காட்டினர் மலாய்க்காரர்கள், 29 விழுக்காட்டினர் சீனர்கள், 7 விழுக்காட்டினர் இந்தியர்கள், 12 விழுக்காட்டின் சபா மற்றும் சராவாக் பூமிபுத்ராக்கள்.