Latestமலேசியா

அமான் பாலஸ்தீன் மீதான விசாரணை நிபுணத்துவ ரீதியில் நியாயமாக நடைபெறுகிறது -அசாம் பாகி

கோலாலம்பூர், நவ 28 – அமான் பாலஸ்தீன் அமைப்புக்கு எதிராக தொழில் நிபுணத்துவ ரீதியில், விசாரணை நியாயமாக நடைபெற்று வருவதாக MACC எனப்படும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் அசாம் பாகி தெரிவித்தார். அந்த அமைப்புக்கு எதிரான விசாரணையில் தீய நோக்கம் எதனையும் நாங்கள் கொண்டிருக்கவில்லையென அவர் கூறினார். எங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள விரும்புவோர் தாராளமாக அப்படிப்பட்ட நடவடிக்கை எடுக்கலாம் என அவர் கூறினார்.

2001 ஆம் ஆண்டு AMLA சட்டத்திற்கு ஏற்ப அமான் பாலஸ்தீன் சொத்துக்கள் முடக்கப்பட்டதே தவிர இதில் எங்களுக்கு எந்தவொரு உள்நோக்கமும் இல்லையென அவர் கூறினார். எந்தவொரு விசாரணையிலும் தேவையேற்பட்டால் வங்கிக் கணக்குகளை முடக்குவோம். நிதி முறைகேடு மற்றும் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியிருப்பது தொடர்பாக நடைபெறும் விசாரணையின்போது தேவைப்பட்டால் கையாளப்படும் அணுகுமுறைகள்தான் அமான் பாலஸ்தீன் அமைப்பின் விசாரணையிலும் MACC பின்பற்றி வருவதாக அசாம் பாகி கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!