![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2023/12/MixCollage-04-Dec-2023-03-56-PM-1127.jpg)
அம்பாங் ஜெயா, டிசம்பர் 4 – தலைநகர், அம்பாங் ஜெயாவிலுள்ள, தாமான் சாரி அங்சானா ஹிலிரிலுள்ள, வீடொன்றில், 16 வயது மைத்துனியை, கற்பழித்ததாக நம்பப்படும் இந்திய நாட்டு ஆடவன் ஒருவன் நேற்று கைதுச் செய்யப்பட்டான்.
நவம்பர் 27-ஆம் தேதி, வீட்டின், கிடங்கு அறையில் அப்பெண் கற்பழிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.
முதலில், அதிகாலை தொழுகைக்காக அப்பெண்ணை எழுப்புவதை போல அவன் பாசாங்கு செய்துள்ளான்.
அப்பெண், தனது அறையை விட்டு வெளியே வந்ததும், அவரை கிடங்கு அறைக்கு இழுத்துச் சென்று அவன் கற்பழித்தாக கூறப்படுகிறது.
அப்பெண் செய்த புகாரை தொடர்ந்து, அவ்வாடவன் கைதுச் செய்யப்பட்டுள்ளான்.
அவனுக்கு எதிராக, 2017-ஆம் ஆண்டு சிறார் பாலியல் குற்றங்கள் சாட்டத்தின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதை, புக்கிட் அமான் சிறார் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச்செயல்கள் புலனாய்வு பிரிவின் இயக்குனர் அசிஸ்டன் கமிஸ்னர் சித்தி கம்சியா ஹசான் உறுதிப்படுத்தியுள்ளார்.