![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/04/Screenshot-2024-04-29-at-5.03.02-PM.png)
அம்பாங் ஜெயா, ஏப்ரல் 29 – கேஸ் எரிவாயு கொள்கலனை தூக்க மறுத்த பொருள் விநியோகிப்பாளர் ஒருவர் தாக்கப்பட்டதில் காயமடைந்தார்.
கடந்த வெள்ளிகிழமை, மாலை மணி 3.30 வாக்கில், தலைநகர், அம்பாங் ஜெயாவிலுள்ள, தாமான் புத்ரா எனுமிடத்தில் அச்சம்பவம் நிகழ்ந்தது.
எரிவாயு கொள்கலனை ஏற்றி வந்த, 36 வயது மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுவதில் இருந்து சம்பந்தப்பட்ட பொருள் விநியோகிப்பாளர் தாங்கி பிடித்து காப்பாற்றியுள்ளார்.
எனினும், முதுகு வலியால் பாதிக்கப்பட்டிருந்த அவர், கீழே உருண்டோடிய எடிவாயு கொள்கலனை தூக்க மறுத்துள்ளார்.
அதனால், சினமடைந்த சம்பந்தப்பட்ட மோட்டார் சைக்கிளோட்டி தனது ஹெல்மெட் தலைகவசத்தை கொண்டு அந்நபரை தாக்கியுள்ளார்.
அதனால், முகத்தில் காயமடைந்த பொருள் விநியோகிப்பாளர் செய்த போலீஸ் புகாரை அடுத்து, கம்போங் தாசிக் பெர்மாய் அம்பாங் எனுமிடத்தில் இருந்து சம்பந்தப்பட்ட மோட்டார் சைக்கிளோட்டி கைதுச் செய்யப்பட்டு நான்கு நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளான்.
அவனுக்கு எதிரான இரு குற்றப்பதிவுகள் இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.