![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2023/11/MixCollage-22-Nov-2023-07-53-PM-4243.jpg)
பெட்டாலிங் ஜெயா, நவ 22 – கடந்த அக்டோபர் மாதம், கோத்தா டாமான்சாராவில் உள்ள குழந்தை பராமரிப்பு மையத்தில் 2 மாத குழந்தைக்கு தனது அலட்சிய போக்கினால் மரணம் விளைவித்த இந்தோனேசிய குழந்தை பராமரிப்பாளர் மீது இன்று செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
எனினும் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது, அதனை 51 வயதான அம்மாது மறுத்தார்.
இக்குற்றம் நிருபிக்கப்பட்டால் 50,000 ரிங்கிட் அபராதம் அல்லது 20 ஆண்டுகளுக்கு மேல் போதாக சிறைத் தண்டனை அல்லது இரண்டுமே விதிவிக்கப்படலாம்.
உள்ளூர் நாட்டவரை திருமணம் புரிந்து, நான்கு பிள்ளைகளுக்கு தாயான அந்த மாது கோத்தா டாமன்சாராவில் மழலையர் பராமரிப்பு மையத்தில் வேலை செய்து வருவதாகவும், தற்போது அந்த பராமரிப்பு மையம் மூடப்பட்டுவிட்டதால் , பாதுகாவலராக வேலை செய்யும் கணவரை நம்பியே குடும்பம் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டவரின் வழக்கறிஞரின் வாதத்திற்குப் பிறகு அம்மாதுக்கு 15 ஆயிரம் அபாரதத்துடன் ஜாமீன் கொடுக்கப்பட்டது. இந்த வழக்கு டிசம்பர் 21ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.