![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/03/MixCollage-15-Mar-2024-07-50-PM-3757.jpg)
கோலாலம்பூர், மார்ச் 15 – “அல்லா” என்ற வாசகம் கொண்ட காலுறைகள் விற்பனை செய்யப்பட்ட சம்பவத்திற்கு, கேகே சூப்பர்மார்ட் (KK Supermart) உரிம வாணிப நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.
மிரானோசாக் (Miranosock) நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட அந்த காலுறைகளின் விற்பனை உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளதையும், ஓர் அறிக்கையின் வாயிலாக KK Supermart தெரிவித்துள்ளது.
அது தயாரிப்பாளரிடமிருந்து வந்தது. எனவே,சம்பந்தப்பட்ட தரப்பினரிடமிருந்து விளக்கம் கோரப்பட்டுள்ளதாகவும், அது தெரிவித்துள்ளது.
முன்னதாக, சிலாங்கூர், பண்டார் சன்வேயிலுள்ள, கேகே சூப்பர்மாட்டில், அல்லா சார்த்தை அச்சிடப்பட்ட காலுறைகள் விற்கப்பட்ட சம்பவம் வைரலாகி கடுமையான கண்டனத்தை பெற்றது.
அதனால், கேகே சூப்பர்மாட்டை புறக்கணிக்குமாறு சிலர் அரைகூவல் விடுத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.