![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2023/12/MixCollage-02-Dec-2023-10-41-AM-1842.jpg)
கோலாலம்பூர், டிச 2 – J-Kom எனப்படும் சமூக தொடர்புத் துறையின் தலைமைச் செயலாளர் டத்தோ Dr Mohammad Agus Yusoff தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என அவரின் உதவி அதிகாரி Abdul Wahab Abdul Kadir அதிரடி குற்றச்சாடை சுமத்தியுள்ளார்.
இச்சம்பவம் கடந்த அக்டோபர் 21ஆம் திகதி சரவாக் பிந்துலுவில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் நிகழ்ந்துள்ளது என அவர் தனது போலிஸ் புகாரில் தெரிவித்துள்ளார்.
இப்புகார் தொடர்பில் தற்போது ஆகுஸ் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலிஸ் படைத் தலைவர் Tan Sri Razarudin Husain உறுதிபடுத்தியிருக்கின்றார்.
அண்மையில் ஆகுஸ் ஆபாசமான உரையாடலை பேசியது தொடர்பில் ஒரு காணொளி வெளிவந்தது. அச்சமயத்தில் வாஹாப்பை தன் மகனாக நினைக்கும் தான் அவரோடு பேசிய உரையாடலை அதே துறையில் வேலை செய்யும் இன்னொரு நபர் அதை திரித்து காணொளி வெளியிட்டதாக ஆகுஸ் குற்றம் சாட்டியிருந்தார்.
அந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துக் கொண்ட வாஹாப்பும் ‘மிஸ்டர் H-தான்’ இதற்கெல்லாம் காரணம் என கூறியிருந்தார்.
ஆனால் தற்போது ஆகுஸ் மீதே வாஹாப் பாலியல் தொல்லை குற்றம் சாட்டியிருப்பதால் இவ்வழக்கில் தற்போது ஒரு திருப்புமுனை ஏற்பட்டுள்ளது.