Latestமலேசியா

ஆடவரிடம் 300,000 ரிங்கிட் கொள்ளை 2 பெண்கள் குற்றச்சாட்டை மறுத்தனர்

கோலாலம்பூர், ஏப் 1 – ஆடவர் ஒருவரிடம் 300,000 ரிங்கிட் கொள்ளையிட்டதாக அம்பாங் செஷன்ஸ் நீதிமன்றத்தில் கொண்டுவரப்பட்ட குற்றச்சாட்டை இரு பெண்கள் மறுத்தனர். இரண்டு வாரத்திற்கு முன் இன்னமும் தலைமறைவாக இருந்துவரும் இதர ஐவருடன் சேர்ந்து அவர்கள் இக்குற்றத்தை புரிந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டனர். துப்பாக்கி போன்ற ஒரு சாதனம் மற்றும் மிளகு தூளை பயன்படுத்தி 27 வயதுடைய Hardev Sing Gill என்பவரை மிரட்டி கொள்ளையிட்டதாக 54 வயதுடைய Zarina Sinin மற்றும் 59 வயதுடைய Safiah Ibrahim ஆகியோர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டால் கூடியபட்சம் 20 ஆண்டு சிறை, மற்றும் பிரமம்படி விதிக்கப்படும் குற்றவியல் சட்டத்தின் 395 மற்றும் 397ஆவது விதியின் கீழ் அவ்விரு பெண்களும் அம்பாங் Taman Melawati யில் சாலையோரத்திற்கு அருகே மார்ச் 15ஆம் தேதியன்று பிற்பகல் 1.30 மணியளவில் அவர்கள் இந்த குற்றத்தில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டனர். அந்த இருவரும் தலா 15,000 ரிங்கிட் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் மீதான குற்றச்சாட்டு ஜூன் 24 ஆம் தேதி மறுவாசிப்புக்கு செவிமடுக்கப்படும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!