![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/03/WhatsApp-Image-2024-03-30-at-10.16.36_e415c985.jpg)
ஜோர்ஜ் டவுன், மார்ச் 30 – ஆயர் ஹீத்தாம் அணைக்கட்டில் நீர் மட்டத்தின் கொள்ளளவை பினாங்கு அரசாங்கம் தொடர்ந்து கண்காணித்துவரும்.
மழை பெய்யாவிட்டால் அந்த அணைக்கட்டின் நீர் 30 நாட்களுக்கு கூடுதலாக மட்டுமே இருக்கும் என பினாங்கு முதலமைச்சர் Chow Kon Yeow தெரிவித்திருக்கிறார்.
பிப்ரவரி மாதம் முதல் பல்வேறு செயல்முறை திட்டங்கள் மூலம் ஆயர் ஹீத்தாம் அணைக்கட்டில் நீர் இருப்பதை உறுதிப்படுத்த பினாங்கு நிர் விநியோகம் முன்கூட்டியே நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அந்த அணைக்கட்டில் நீர் கொள்ளளவு தொடர்ந்து இருப்பதை உறுதிப்படுத்துவதற்கு அதன் நீரோட்ட வேகத்தை குறைக்கும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக பினாங்கு நீர் விநியோக நிறுவனத்தின் தலைவருமான Chow கூறினார்.
ஆயர் ஹீத்தாம் அணைக்கட்டின் நீர் மட்டம் குறைவாக இருக்கிறது என்ற தகவலை Chow மறுக்கவில்லை. எனினும் ஏப்ரல் முதல் ஜூன் மதாம்வரை மழைக்காலமாக இருப்பதால் ஆயர் ஹீத்தாம் அணைக்கட்டில் நீர் மட்டும் அதிகரிக்கும் என Chow நம்பிக் தெரிவித்தார்.