![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/03/MixCollage-12-Mar-2024-03-37-PM-7396.jpg)
கோலாலம்பூர், மார்ச் 12- இணைய சூதாட்டத்தில் சம்பந்தப்பட்டதன் தொடர்பில் கோலாசிலாங்கூர் வட்டாரத்தில் அறுவர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் அனைவரும் இணைய சூதாட்ட நடவடிக்கைகளுக்கு முகவர்களாக செயல்பட்டுள்ளதாக புக்கிட் அமான் வர்த்தக குற்றப்புலனாய்வுத் துறையின் விசாரணைத்துறை தெரிவித்திருக்கிறது.
21 முதல் 50 வயதுடைய அவர்கள் அனைவரும் ஒழுங்கீனம், சூதாட்டம் மற்றும் குண்டர் கும்பல் துடைத்தொழிப்பு பிரிவின் புக்கிட் அமான் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்து ஏழு கை தொலைபேசிகள், சட்டவிரோத நான்கு இலக்க எண்கள் எழுதும் தாள்கள் மற்றும் வர்த்தக லைசென்ஸ்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
தொலைதொடர்பு சாதனங்கள் மற்றும் பல்வேறு பொருட்களை விற்கும் கடையின் பெயர்களில் அவர்கள் சட்டவிரோத நான்கு இலக்க எண்களை கை தொலைபேசியில் எழுதும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்ததை புக்கிட் அமான் அதிகாரிகள் கண்டுப்பிடித்துள்ளனர்.