ஈப்போ, மார்ச் 15 – வங்கியில் கடன் விளம்பரம் வழங்குவதாக சமூக வலைத்தளத்தில் வெளியான விளம்பரத்தை நம்பிய வர்த்தகர் ஒருவர் இணைய மோசடி கும்பலிடம் RM 6,300 ரிங்கிட்டை இழந்தார்.
அஸ்வான் என்று அடையாளம் கூறப்பட்ட அந்த 52 வயது வர்த்தகர் மார்ச் 2ஆம்தேதி வங்கி ஒன்று செய்திருந்த விளம்பரத்தை முகநூலில் கண்டதை தொடர்ந்து அது தொடர்பான செயலியை கிளிக் செய்துள்ளார்.
அதன் பின் முகமட் டேனியல் என தம்மை அறிமுகப்படுத்திக்கொண்ட நபர் வங்கியின் கடன் அதிகாரி கூறிக்கொண்டு ‘Whatsapp’ புலனம் வாயிலாக அந்த வர்த்தகரை தொடர்பு கொண்டுள்ளார்.
தமக்கு RM 30,000 ரிங்கிட் கடன் அங்கீகரிக்கப்பட்டதாகவும் அதற்காக RM 3,000 ரிங்கிட் இருமுறை செலுத்த வேண்டும் என கூறப்பட்டதை தொடர்ந்து அவர் தெரிவித்த வங்கிக் கணக்கில் அந்த பணத்தை பட்டுவடா செய்யதாக அஸ்வான் தெரிவித்தார்.
அதன்பிறகு மேலும் RM 4,100 ரிங்கிட் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டதால் தாம் மோசடிக்கு உள்ளானதை உணர்ந்து போலிசில் புகார் செய்ததாக அஸ்வா தெரிவித்தார்.