![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2023/11/MixCollage-26-Nov-2023-10-09-AM-8374.jpg)
கொச்சி , நவ 26 – இந்தியாவில் கேரளாவில் கொச்சியிலுள்ள அறிவியல் மற்றும் தொழிற்நுட்ப பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் நான்கு மாணவர்கள் மரணம் அடைந்ததோடு மேலும் 64 பேர் காயம் அடைந்தனர்.
நேற்று நடைபெற்ற இந்த சம்பவத்தில் காயம் அடைந்தவர்களில் நால்வர் கவலைக்கிடமாக இருப்பதாக கேரளா உயர்க்கல்வி அமைச்சர் வீனா ஜியோர்ஜ் தெரிவித்திருக்கிறார்.
அந்த பல்கலைக்கழகத்தில் தொழிற்நுட்ப கண்காட்சி நடைபெற்றதோடு பாடகி நிகிதா காந்தி அந்த பல்கலைக்கழகத்தின் ஆடிட்டோரியத்தில் இசை நிகழ்சியை படைப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நுழைவுக் கார்டுகளை வைத்திருந்தவர்கள் மட்டுமே உள்ளே செல்வதற்கு அனுமதிக்கப்படுவர் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த ஆடிட்டோரியத்திற்கு வெளியே காத்திருந்தவர்கள் அதிகமாக இருந்ததோடு அப்போது மழை பெய்ததால் உள்ளே செல்வதற்கு முண்டியடித்துக் கொண்டு அவர்கள் செல்ல முயன்றதால் நெரிசல் ஏற்பட்டது. இதனால் சில மாணவர்கள் வழுக்கி கீழே விழுந்தனர்.
பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட 64 மாணவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் இரண்டு மாணவர்களும் இரண்டு மாணவிகளும் கொச்சியிலுள்ள கலாமாசேய் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டபோதே இறந்துவிட்தாக வீனா ஜியோர்ஜ் தெரிவித்தார்.