![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2023/12/MixCollage-01-Dec-2023-10-40-AM-2438.jpg)
கோலாலம்பூர், டிச 1 – நாட்டிற்குள் விசா இன்றி குறுகிய கால வருகை புரிவதற்கு இந்தியா மற்றும் சீனாவைச் சேர்ந்த சுற்றுப்பயணிகளுக்கு இன்று முதல் வாய்ப்பு வழங்கப்பட்டதை தொடர்ந்து அந்நாடுகளைச் சேர்ந்த அதிகமான சுற்றுப்பயணிகளை கவர்வதற்கான பிரச்சாரங்களை ‘Tourism Malaysia’ எனப்படும் மலேசிய சுற்றுலா நிறுவனம் மேற்கொள்ளவிருப்பதாக அதன் தலைமை செயலாளர் டத்தோ அம்மார் அப்துல் கபார் தெரிவித்திருக்கிறார். இந்தியா மற்றும் சீனாவிலுள்ள விமான நிறுவனங்கள், பயண முகவர்கள் ஆகியவற்றுடன் இணைந்து நமது சுற்றுலா ஊக்குவிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்துவதற்னாக நடவடிக்கைகளில் கூடுதல் ஒத்துழைப்புக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் கூறினார். இந்தியா மற்றும் சீனாவைச் சேர்ந்த சுற்றுப்பயணிகளுக்கு விசா இலக்கு அளிக்கப்பட்டதை சுற்றுலா தொழில்துறையைச் சேர்ந்த இதர பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர் என அம்மார் அப்துல் கபார் தெரிவித்தார்.