![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2023/12/MixCollage-06-Dec-2023-10-18-AM-5151.jpg)
ஜகார்த்தா , டிச 6 – இந்தோனேசியாவின் சுமத்திரா தீவில் மராபி எரிமலை குமுறியதில் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 22ஆக உயர்ந்துள்ளது.
எரிமலை குழம்புகளால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்த மேலும் அதிகமான மலையேறிகளின் உடல்கள் கண்டுப்பிடிக்கப்பட்டன. மலையேறும் நடவடிக்கையில் ஈடுபட்டவர்களை கண்டுப்பிடிப்பதற்காக 200க்கும் மேற்பட்ட தேடும் மற்றும் மீட்புக் குழுவினர் இன்று காலையில் தங்களது நடவடிக்கையை தொடங்கியுள்ளனர்.
மேற்கு சுமத்திராவில் 2,891 மீட்டர் உயரம் கொண்ட மராபி எரிமலை ஞாயிற்றுக்கிழமை குமுறியதைத் தொடர்ந்து அதன் சாம்பல்கள் மூன்று கிலோமீட்டர் உயரத்திற்கு வானில் தென்பட்டன.