Latestமலேசியா

இந்தோனேசிய தோட்டத் தொழிலாளரை புலி அடித்துக் கொன்றது

குவா மூசாங், நவ 30 – கிளந்தான் குவா முசாங்கில் கம்போங் குவாலா டோல் ரப்பர் தோட்டத்தில் இந்தோனேசிய தொழிலாளர் ஒருவரை புலி அடித்துக் கொன்றதாக நம்பப்படுகிறது.

36 வயதான அவ்வாடவனின் கழுத்தின் முன்புறம், வலது கை, காலின் இரண்டு பெருவிரல்களை புலி கடித்துள்ளது.

மேலும் அவரது உடலுக்கு கீழே உள்ள உடல் பாகங்களும் தனித் தனியாக புலி கடித்து துண்டித்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக குவா முசாங் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்பிரடண்ட் சிக் சூன் ஃபூ தெரிவித்தார்.

அந்த தொழிலாளி காணவில்லையென நேற்று பிற்கல் 1.30 மணியளவில் புகார் கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து அவரை தேடும் மற்றும் மீட்கும் நடவடிக்கையில் போலீஸ், வனவிலங்கு பூங்கா துறை மற்றும் பொதுமக்கள் ஈடுபட்டனர்.

ஒரு மணி நேரம் தேடப்பட்ட பின் அவரது மோட்டார் சைக்கிள் இருந்த இடத்திலிருந்து 200 மீடடர் தொலைவில அவரது உடல் கண்டுப்பிடிக்கப்பட்டதாக சூப்பிரடண்ட் சிக் சூன் ஃபூ வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

இதனிடையே அந்த புலியை பிடிப்பதற்காக வனவிலங்குத்துறை கண்காணிப்பு கேமரா மற்றும் பொறிகளை வைத்துள்ளது .

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!