செத்தியு, ஜன 30 – குடியானவருக்கு சொந்தமான ஆட்டுக் குட்டியை விழுங்கிய மலைப்பாம்பை சிவில் தற்காப்பு படை உறுப்பினர்கள் பிடித்தனர். ஜெர்த்தேவில் உள்ள குடியானவர் ஒருவரிடமிருந்து தகவல் கிடைக்கப்பெற்றதை தொடர்ந்து ஜெர்த்தே , கம்போங் ஹுலு செலாடாங்கிலுள்ள அவரது இல்லத்திற்கு அருகேயுள்ள ஆட்டுப் பட்டிக்கு விரைந்த சிவில் தற்காப்பு படையின் உறுப்பினர்கள் ஆறு மீட்டர் நீளம் கொண்ட பாத்தேக் வகை மலைப்பாம்பை பிடித்தனர். சுமார் 100 கிலோ எடையுள்ள அந்த மலைப்பாம்பின் அருகே இறந்த பெண் ஆடு ஒன்றின் உடல் பகுதி காணப்பட்டது. அந்த ஆடு மற்றொரு ஆட்டுக் குட்டியையும் விழுங்கியிருப்பது தெரியவந்ததது. அந்த மலைப்பாம்பை பிடிப்பதற்கு 10 நிமிடம் மட்டுமே பிடித்ததாக சிவில் தற்காப்பு படையின் அதிகாரி கேப்டன் முகமட் நிசு ஹுசைன் கூறினார். இரு கிராமவாசிகளின் உதவியோடு அறுவர் அந்த மலைப்பாம்பை பிடித்து வாகனத்தில் ஏற்றியதாக அவர் தெரிவித்தார்.
Related Articles
இணையம் வாயிலான கார் விற்பனை மோசடியில் 41 ஆயிரம் ரிங்கிட்டை பறிகொடுத்தது போக, கொலை மிரட்டலுக்கும் ஆளான பஹாவ் ஆடவர்
15 hours ago
நாய் கடித்த ஆடவருக்கு சிகிச்சையளிப்பதில் தாமதம்? சுல்தானா அமீனா மருத்துவமனை தன்னிலை விளக்கம்
15 hours ago