![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2023/11/MixCollage-22-Nov-2023-12-17-PM-6800.jpg)
கோலாலம்பூர், நவ 22 – சமூக வலைத்தளத்தில் அறிமுகமான ஒரு பெண்ணின் பேச்சை நம்பி இல்லாத திட்டத்தில் முதலீடு செய்த 598,680 ரிங்கிட்டை தனியார் நிறுவன நிர்வாகி ஒருவர் இழந்தார். பாதிக்கப்பட்ட 39 வயதுடைய ஆடவரிடமிருந்து இது குறித்து வர்த்தக குற்றப்புலனாய்வுத்துறை நேற்று புகாரை பெற்றுள்ளதாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஃபக்ருடின் அப்துல் ஹமீட் தெரிவித்தார். முதலீட்டிற்கு அதிக வருமானம் கிடைக்கும் என்பதால் அந்த திட்டத்தில் முதலீடு செய்யும்படி அந்த அந்த பெண் கேட்டுக்கொண்டதை நம்பி தாம் ஏமாந்துவிட்டதாக அந்த ஆடவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி முதல் இவ்வாண்டு நவம்பர் 11 ஆம் தேதி வரை பல்வேறு வங்கிக் கணக்குகளில் 598,680 ரிங்கிட்டை பட்டுவாடா செய்ததாகவும் அவர் தமது புகாரில் தெரிவித்துள்ளதாக ஃபக்ருடின் கூறினார். குறுகிய காலத்தில் முதலீட்டிற்கு அதிக வருமானம் கிடைக்கும் என்று கூறும் தரப்பினரை நம்பி பணத்தை இழந்துவிட வேண்டாம் என அவர் பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.