Latestமலேசியா

ஈப்போவிற்கு அருகில், விரைவு பேருந்து டிரெய்லரை மோதி விபத்து ; ஓட்டுனர் உட்பட ஐவர் காயம்

ஈப்போ, மே 31 – பேராக், ஈப்போவிற்கு அருகில், வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில், தென் மாநிலங்களை நோக்கி செல்லும் வழியில், விரைவுப் பேருந்து ஒன்று, டிரெய்லரின் பின்புறத்தை மோதி விபத்துக்குள்ளானதில், அதன் ஓட்டுனரும், நான்கு பயணிகளும் காயமடைந்தனர்.

இன்று அதிகாலை மணி 5.16 வாக்கில் அவ்விபத்து நிகழ்ந்தது.

அவசர அழைப்பு கிடைத்ததும், சிம்பாங் பூலாய் தீயணைப்பு மீட்பு நிலையத்தைச் சேர்ந்த ஒன்பது வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக, பேராக் தீயணைப்பு மீட்புத் துறையின் நவடிக்கை பிரிவு துணை இயக்குனர் சபரோட்ஸி நோர் அஹ்மாட் தெரிவித்தார்.

சம்பவத்தின் போது, விபத்துக்குள்ளான விரைவுப் பேருந்தில் 25 பயணிகள் இருந்தனர்.

விபத்து காரணமாக, இருக்கையில் கால் சிக்கிக் கொண்டதால், பேருந்து ஓட்டுனர் படுகாயமடைந்ததாக கூறப்படுகிறது.

எனினும், இதர நான்கு பயணிகள் சிராய்ப்பு காயங்களுக்கு மட்டுமே இலக்காகினர்.

காயமடைந்தவர்கள் அனைவரும் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அவ்விபத்தில் காயத்திற்கு இலக்காகாத இதர பயணிகள் மாற்று பேருந்து வாயிலாக, அவரவர் செல்ல வேண்டிய இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!