
ஈப்போ, மார்ச்-5-ஈப்போ அருகே PLUS நெடுஞ்சாலையில் நேற்று மாலை நிகழ்ந்த விபத்தில், மரத்தில் மோதி கார் தீப்பிடித்ததில் அதன் ஓட்டுநர் உடல் கருகி மாண்டார்.
தகவல் கிடைத்து 4 மீட்டர் தொலைவில் உள்ள சம்பவ இடத்திற்கு சிம்பாங் பூலாய் தீயணைப்பு மீட்புத் துறை விரைந்தது.
அப்போது கார் கிட்டத்தட் 80 விழுக்காடு எரிந்துபோயிருந்தது.
ஓட்டுநர் இருக்கையில் இறந்த கிடந்தவரின் உடல் ஒருவழியாக மீட்கப்பட்டது.
எனினும் சடலம் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என அதிகாரிகள் கூறினர்.



