Latestமலேசியா

செபராங் ஜெயா மருத்துவமனை, இருதய, குழந்தை பராமரிப்புக்கான மலேசிய வடக்கு ஆலோசக மையமாக மாறும்!

பட்டர்வெர்த், மே 2- கூடிய விரைவில் செபராங் ஜெயா மருத்துவமனை, மலேசிய வடக்கு இருதயவியல் மற்றும் குழந்தைகள் இருதய பராமரிப்பு ஆலோசக மையமாக செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நடவடிக்கை முக்கிய சிகிச்சைகளுக்காக பினாங்கு மருத்துவமனைக்குப் பரிந்துரைச் செய்வதற்கான தேவையைக் குறைப்பதோடு உள்ளூர் மக்களுக்குச் சிறப்பு சிகிச்சைக்கான அணுகலை விரைவுப்படுத்தும் என்று சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சுல்கிஃப்லி அகமது கூறியுள்ளார்.

மருத்துவமனையில் கூடுதல் 10 மாடி கட்டடம் கட்டி முடிக்கப்பட்டவுடன் ENT, குழந்தை இருதயவியல் மற்றும் மறுவாழ்வு மருத்துவம் போன்ற சிறப்பு சேவைகள் செயல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். அதே நேரத்தில் இத்திட்டம் மருத்துவமனைகளில் நெரிசலைக் குறைக்க உதவும் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

எனவே, இத்திட்டங்கள் திட்டமிட்டபடி முடிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, கண்காணிப்பு மற்றும் நிர்வாகத்தை வலுப்படுத்துமாறு பொதுப்பணித் துறையை அவர் வலியுறுத்தினார்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!