![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2023/12/MixCollage-11-Dec-2023-08-15-PM-5301.jpg)
கோலாலம்பூர், டிச 11 – செராஸ் தாமான் மிடாவில் நேற்று விடியற்காலையில் உணவகம் ஒன்றில் கை கலப்பில் ஈடுபட்டதன் தொடர்பில் அரசியல் பார்வையாளர் உட்பட ஆறு ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர். 30 முதல் 40 வயதுடைய அந்த சந்தேகப் பேர்வழிகள் அனைவரும் நேற்றிரவு 9 மணிக்கு முன்னதாக செராஸ் வட்டாரத்தில் கைது செய்யப்பட்டதாக செராஸ் போலீஸ் தலைவர் ஸாம் ஹலீம் ஜமாலுடின் தெரிவித்தார். சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட ஓர் இடுகையினால் இந்த கைகலப்பு நடந்திருக்கக்கூடும் என அவர் கூறினார். விடியற்காலை 4 மணியளவில் ஆடவர் ஒருவர் மேலும் இரு நண்பர்களுடன் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது அவர்களை நோக்கி அங்கு தோன்றிய ஆடவர் ஒருவர் நாற்காலியை எடுத்து வீசியதைத் தொடர்ந்து கைகலப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டது.