![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/06/MixCollage-11-Jun-2024-12-37-PM-3995.jpg)
தஞ்சோங் மாலிம், ஜூன் 11 – உப்சி எனப்படும் சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழகப் பரதநாட்டிய பண்பாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் மீண்டும் மலர்ந்தது முத்தமிழ் விழா பாகம் 2.
தேசிய அளவிலான இப்போட்டி கடந்த மே 25ஆம் திகதி பல அரசாங்கப் பல்கலைக்கழக மற்றும் 68 தமிழ்ப்பள்ளி, இடைநிலைப்பள்ளி மாணவர்களின் பங்கேற்புடன் சிறப்பாக நடைபெற்றது.
அதில் பல்கலைக்கழக மாணவர்களுக்குக் கல்வி மற்றும் விளையாட்டு, நிதி மற்றும் நலன்புரி, ஆளுமை மற்றும் ஆன்மீக மேம்பாடு என மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்ட மாநாட்டில், அவர்கள் முன்மொழிந்த கருத்துகள் அந்நாளில் உயர் கல்வி அமைச்சின் பிரதிநிதி காளியப்பன் ராஜகுமாரனிடம் ஒப்படைக்கப்பட்டது இந்நிகழ்ச்சியின் தனிச்சிறப்பாகும்.
இந்திய சமுதாயத்தை மேம்படுத்துவதற்காக மலேசியாவில் உள்ள மாணவர்களின் குரல் வழி உரிய அமச்சுகளிடம் தீர்வினைக் கண்டு ஒப்படைக்க வேண்டும் என்ற மாநாட்டின் நோக்கம் அன்று நிறைவடைந்ததாக அதன் இயக்குநர் உதயவேலன் லிங்கம் தெரிவித்தார்.
இதனிடையே, பல்கலைக்கழக மாணவர்களுக்கு மட்டுமல்லாது தமிழ்ப்பள்ளி மற்றும் இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கும் முத்தமிழ் விழாவில் கவிதை ஒப்புவித்தல் போட்டியும் கட்டுரை எழுதும் போட்டியும் ஏற்பாடுச் செய்யப்படிருந்தது.
ஜோகூர், சிலாங்கூர், கெடா, பேராக், மலாக்கா, திரெங்கானு ஆகிய மாநிலங்களைப் பிரதிநிதித்து மாணவர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில், உப்சி பல்கலைக்கழக மாணவர்கள் விவகாரங்கள் மற்றும் முன்னாள் மாணவர்களின் துணைவேந்தர் சசிகரன் மோனேயம் (Sasigaran Moneyam) மற்றும் உயர்கல்வி அமைச்சகத்தின் மாணவர் விவகாரப் பிரிவின் (KPT) முதன்மை உதவி இயக்குநர் காளியப்பன் ராஜகுமாரன் (Kaliyapan Rajakumaran) ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.