![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/03/MixCollage-22-Mar-2024-02-13-PM-515.jpg)
கோலாலம்பூர், மார்ச் 22 – உலகத் தமிழர்களால் இணையம் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் வாக்குகளை பெற்று நடைபெறும் எடிசன் திரை விருதுகள் சென்னை வர்த்தக மையத்தில் மார்ச் 24ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் 2023 ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை வெளியீடு கண்டு திரைப்படங்கள் தியேட்டர் மற்றும் OTT தளங்களில் வெளியீடு கண்ட திரைத்துறை சார்ந்த நடிகர் நடிகைகள், இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள், பின்னணி பாடகர்கள், ஒளிப்பதிவாளர்கள், எடிட்டர்கள், கலை இயக்குனர்கள், சண்டை பயிற்சியாளர்கள் நடன இயக்குனர்கள் போன்றவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கப்பட உள்ளது.
இந்நிகழ்வில் கடந்த காலங்களில் எடிசன் திரை விருது பெற்றவர்கள் சிறப்பு விருந்தினர்களாகவும், கனடா, ஆஸ்திரேலியா, லண்டன், இலங்கை, சிங்கப்பூர், மலேசிய நாடுகளிலிருந்து திரைகலைஞர்களும், இந்நிகழ்வில் ஜான் பிரிட்டோ நடன குழுவுடன் இணைந்து கலை நிகழ்வு நடத்த உள்ளனர். இந்நிகழ்வில் பார்வையாளர்களாக எடிசன் விருதிற்கு வாக்களித்த ரசிகர்கள் ஆவணத்தைக் காட்டி பார்வையாளர்களாக கலந்து கொள்ள உள்ளனர் என எடிசன் விருது குழு தலைவர் செல்வகுமார் தெரிவித்தார்