லண்டன், ஏப்ரல் 18 – ஆல்பாபெட் (Alphabet) நிறுவனத்திற்குச் சொந்தமான, தொழில்நுட்ப ஜாம்பவானான கூகுள், தனது ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது.
எனினும், அதனால் எத்தனை பேர் பாதிக்கப்படுவார்கள் என்ற விவரம் எதுவும் வெளியிடப்படவில்லை.
அவ்வாறு பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்கள், கூகுளின் உள் பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என அதன் செய்தித் தொடர்பாளர் நேற்று தெரிவித்தார்.
அதே சமயம், செலவினங்களை குறைக்கும் முயற்சியாக, இங்கிலாந்திலுள்ள, கூகுளின் செயல்பாடுகள் சில, இந்தியா, சிகாகோ, அட்லாண்டா மற்றும் டப்ளின் உட்பட, அந்நிறுவனம் முதலீடு செய்துள்ள இதர சில மையங்களுக்கு மாற்றப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாண்டு தொடங்கியதில் இருந்து, உலகம் முழுவதும் உள்ள தொழில்நுட்பம் மற்றும் ஊடக துறைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை இந்த பணிநீக்கம் உறுதிப்படுத்தியுள்ள வேளை : பல நிறுவனங்கள் பொருளாதார நிச்சயமற்ற சூழலை எதிர்கொண்டுள்ளதால், இந்நிலை தொடரலாம் என்ற அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
எனினும், இந்நிலையை சரிசெய்ய, ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக கூகுள் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.