![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/06/MixCollage-05-Jun-2024-09-18-AM-7877.jpeg)
குவாந்தான், ஜூன்-5 – பஹாங், குவாந்தானில் எண்ணெய் நிலையமொன்றில் நிறுத்தி வைக்கப்பட்ட காரினுள் ஆள் இருப்பது தெரியாமல், கண்ணிமைக்கும் நேரத்தில் மர்ம நபர் அதனைக் கடத்திக் கொண்டுப் போயிருக்கிறார்.
அந்த Honda City காருக்குச் சொந்தக்காரரான 38 வயது பெண்ணின் தாயார் தான் காருக்குள் இருந்துள்ளார்.
எனினும், காருக்குள் ஆள் இருப்பதை உணர்ந்த அந்நபர், சம்பவ இடத்தில் இருந்து 400 மீட்டர் தொலைவில் சாலையோரம் அவரை இறக்கி விட்டு காரோடு கம்பி நீட்டினான்.
நேற்று முன்தினம் பிற்பகல் 3.10 மணியளவில், காருக்கு எண்ணெய் நிரப்பவும், கழிவறைக்குச் செல்லவும் Semambu-வில் உள்ள Shell நிலையத்தில் அப்பெண் காரை நிறுத்திய போது அச்சம்பவம் நிகழ்ந்தது.
எண்ணெய் நிரப்பியதும் கழிவறைக்கு அருகே காரை நிறுத்தி விட்டு, என்ஜின் ஓடிக்கொண்டிருக்கும் காரில் இருந்து இறங்கி அப்பெண் கழிவறைக்குச் சென்றார்.
காரினுள் அமர்ந்திருந்த தனது தாய் திடீரென உதவிக் கேட்டு கூச்சலிட்ட போது திரும்பிப் பார்த்தால், மர்ம நபர் காரோடு கம்பி நீட்டி விட்டார்.
மொட்டைத் தலையோடு, கருப்புக் கண்ணாடி அணிந்திருந்த ஆடவன் காரை எடுத்துக் கொண்டு ஓடுவது அந்த Shell நிலைய CCTV கேமராவில் பதிவாகி வைரலாகியுள்ளது.
அப்பெண்ணின் iphone 14 கைப்பேசி, TnG, Smart Tag அட்டைகளும் காரோடு போய் விட்டன.
திருடப்பட்டதென நம்பப்படும் Honda EX-5 மோட்டார் சைக்கிளில் வந்த அவ்வாடவனை போலீஸ் தீவிரமாகத் தேடி வருகிறது.